இன்னிக்கு நைட் என் வீட்டு லிப்ட்ல ஏறும்போது என்கூட ஒரு பொண்ணும் வந்தாங்க..வெளியூர்காரன் நியாயபடி அவள பன்னுனுதான் சொல்லணும்...அதிகமா போனா 19 வயசுதான் இருக்கும்...ஆனா நான் பார்த்த வரைக்கும் 22 இருக்கும்னு சொல்லுவேன்..ப்ளூ கலர் ஜீன்ஸ், ரெட் கலர்ல கோடு போட்ட காலர் வெச்ச டி.ஷர்ட் போட்டு நச்சுன்னு நதியா கொண்டை போட்ருந்தா...ஹை ஹீல்ஸ்க்கு பதிலா முடிச்சி போட்ட டிசைன்ல ஒரு லெதர் ஷூ அவ காலையும் அழகாகிகிட்டு இருந்துச்சு...கழுத்துல செம கியுட்டான ஒரு செயின் போட்ருந்தா...செம லென்க்துங்க.அந்த செய்னோட டாலர்ல எஸ் னு போட்ருந்துச்சு..சங்கீதா,ஷர்மிலா இப்டி எதாச்சும் ஒரு பேரா இருக்கும் போலருக்கு...நல்ல வாசனை..என்சான்டியர் பவுடர்தான் யூஸ் பண்ணுவா போல...சோப்பு பியர்ஸ்...லிப்ட்ல கூட்டம் அதிகமா இருந்ததால நான் அவ்ளவா கண்டுக்கல அந்த பொண்ண..தவிர எனக்கு பொண்ணுங்கள கண்ணுகொட்டாம சைட் அடிக்கறது புடிக்காதும்கறதும் ஒரு காரணம்..கிரௌண்ட் ப்ளோர்ல எலாரும் ஏறுனோம்..என் தாத்தா அவரோட கேர்ள் பிரெண்ட் என் ஆத்தாவ ஏமாத்தாம கல்யாணம் பண்ணிகிட்ட புண்ணியம் எல்லாரையும் செகண்ட் ப்ளோர்ல எறக்கி விட்ருச்சு..
இப்போ நானும் அந்த ஜிகுடியும் மட்டும்..நான் எறங்க வேண்டியது 21 வது ப்ளோர்ல..வெளியூர்காரனால குஷி தாங்க முடியல..இந்த கேப்ப யுஸ் பண்ணி எப்டியாச்சும் அந்த பொண்ணுகிட்ட ஐ லவ் யு சொல்றதுன்னு முடிவுக்கு வந்துட்டான்..(நமக்கு ஐ லவ் யு சொல்றதுக்கு ஒரு பொண்ணும், நல்ல சான்சும் கெடைச்சா போதும்..) பட் ஐ லவ் யு சொல்றதுக்கு முன்னாடி எதாச்சும் பேசி பிரெண்ட்ஷிப்ப வளர்த்துகிட்டாதான ஒரு கவுரவமா இருக்கும்..வெளியூர்காரன் நாகரீகமானவங்க...பொண்ணுங்கள நாசுக்கா கையாளுவான்...ஆகையினாலே அந்த மாதிரி சமயங்களில் ஆண்களால் பெண்களிடம் லிப்டில் காலம்காலமாக கேக்கப்படும் கேள்வியை வெளியூர்காரனும் கேட்டான்...எக்ஸ்கியுஸ் மீ ...நீங்க எந்த ப்லோர்னு...அப்போ 21 அப்டீன்னு வீர சிவாஜி பாய்சன் சாப்டுட்டு கட்டபொம்மன் குரல்ல பேசுன மாதிரி ஒரு பதில் வந்துச்சு..!!!
உச்சிமாங்காளி...இது என் பொண்டாட்டிய செல்லமா கூப்ட்ரதுக்கு நான் 6 வது படிக்கும்போது யோசிச்சு வெச்ச செல்ல பேரு..(கல்யாணம் ஆன அண்ணணுக எல்லாம் சரியா நைட் பதினோரு மணிக்கு பல்லுகில்லேல்லாம் சுத்தபத்தமா வெளக்கிட்டு உங்க பொண்டாட்டிமார்கள செல்லமா உச்சிமாங்காளினு கூப்ட்டா நறுக்குன்னு எச்சில் வாசனையோட ஒரு லிப்ஸ் கிஸ் கருகி போன உங்க உதட்டுக்கு பரிசா கெடைக்கும்னு ஜக்கம்மா மேல சத்தியம் பண்ணி வெத்து பத்திரத்துல எழுதி குடுக்கறான் வெளியூர்காரன்... )
அப்டியாகபட்ட வேளையிலே, கற்போட வாழறத மட்டுமே லட்சியமா மேற்கொண்டு ஒரு பதிவிரதனா, ஆஞ்சநேயரோட ஒரிஜினல் பக்தனா, (அதாம்ப்பா...அசல் பக்தன்...அந்த வார்த்தைய கூட பயன்படுத்தமாட்டான் இந்த விஜய் ரசிகன்..) வாழ்க்கை படக சலனமில்லாம ஒட்டிகிட்டு இருந்தான் வெளியூர்காரன்...அந்த போன் கால் வர்ற வரைக்கும்...
ஹலோ ஸ்ருதியான்னு ஒரு குரல்..நானும் பதட்டத்துல பீசு மிஸ் ஆய்ட கூடாதேன்னு ஆமாம்னு சொல்லிட்டேன்...ஸ்ருதிங்கறீங்க..ஆனா ஆம்பள குரல்ல பேசறீங்கன்னு கலகலன்னு சிரிச்சது என் போன்..அவ கூட சேர்ந்து..பொம்பளபுள்ள சிரிச்சா போச்சுன்னு சும்மாவா சொன்னுச்சு என் அவ்வா...அவ்ளோ நாளா கட்டுசிட்டா கற்ப காவல் காத்துகிட்ருந்த வெளியூர்காரன் மனசு படீர்னு பஞ்சர் ஆகி பொசுக்குன்னு படுத்துருச்சு..எது என் அப்டியா...யோவ் குரலாயா அது..அயோயோ எப்டியா புரிய வெப்பேன் உனக்கு அதை..தேன க்ளோப் ஜாமூன்ல ஊற வெச்சு கொஞ்சம் முந்திரி பருப்ப தூவி அதை ஒரு ப்லூட்ல ஊத்தி எஸ்.ஜானகிய விட்டு ஊத சொன்னா வரும்ல ஒரு சவுண்டு...அது அந்த புள்ளயோட குரல்யா...அந்த குரலுக்கு மட்டும் கழுத்து இருந்துச்சுன்னா தக்காலி போன்லயே தாலிய கட்டி புள்ளைய பெத்துருப்பான் இந்த வெளியூர்காரன்..
ஒரு வாரத்திற்கு பிறகு...
வேறென்ன நடந்துருக்கும்...2039 மெசேஜுகள்...அவுக செலவுல 359 மிஸ் கால்கள்...என் செலவுல விடிய விடிய கடலைகள்..கிளைமாக்ஸ்ல வெளியூர்காரன் காலடில அந்த பொண்ணு...ஆனா எவ்ளவோ கெஞ்சியும் என் உச்சிமாங்காளிய என்னால பார்க்க மட்டும் முடியலைங்க..ஒரு வழியா நான் பிரசன்ட்டா வாங்கி வெச்சுருக்கற அந்த மொபைல் போன உன்ன பார்க்காம உன்கிட்ட எப்டி குடுக்கறதுன்னு பீலிங்கோட கேட்டோன்ன என் வீட்டு பப்பி மாதிரி தாவி குதிச்சு ஓடோடி வந்தா என் உச்சிமாங்காளி..அடுத்த நாள் பார்க்கறதா முடிவாயருச்சு...
அவ என்ன பார்க்க ஒத்துகிட்ட அடுத்த செகென்ட் நான் பண்ண விஷயம் எங்கம்மாவுக்கு போன் போட்டதுதான்...போன போட்டு சொல்லிட்டேன்..நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணா அது அந்த பொண்ணதான்னு ..அதுக்கு எந்த பொண்ணடான்னு கேட்டாங்க...அதுக்கு காதல்ல ஜெயிச்சு காட்ட போற ஆணவத்தோட நான் சொன்னேன்.. இன்னிக்கு நான் மொதொ மொதொள்ள பார்க்க போறனே..அந்த பொண்ணதான்னு ..அதுக்கு எங்கம்மா அப்பன மாதிரியே லூசா வந்து பொறந்துருக்கான் பாரு மூதேவின்னு கேசுவலா சொல்லிட்டு போன வெச்சிட்டு வெங்காயம் அரிய போய்ட்டாங்க...மனம் தளராத வெளியூர்காரன் கால் கிலோ பௌடரை பேப்பரில் மடித்து கொண்டு புறபட்டான் அந்த தேனிசை தென்றலை சந்திக்க...
கரெக்டா மூணு மணிக்கு கிண்டி ஒலிம்பியா டெக்னோ பார்க் என்ட்ரன்ஸ்ல வந்து வெயிட் பண்ணு...நான் ஒன் அவர் பெர்மிசன் போட்டுட்டு வந்து உன்ன பார்க்கறேன்னு மொபைல் மேல இருந்த ஆசைல என்கிட்டே கூவிருந்தா என் பச்சக்கிளி...அந்த உச்சிமாங்காளி..எப்போதும் ஒன்பது மணி ஆபிஸ்க்கு பத்து முப்பதுக்கெல்லாம் போய் நின்னு கடிகாரத்த வெக்கப்பட வெக்கற நான்,அன்னிக்கு எதோ டென்சன்ல மூணு மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு லேட்டா ஒரு மணிக்குதான் போனேன்... அந்த பில்டிங்க்கு சைட்ல உள்ள இளனி கடைல ரெண்டு இளனி வாங்குனேன்.ஒன்னு குடிக்க இன்னொன்னு பேஷ பிரெஷ் ஆக்க...ஆமாம்ங்க..இளனில மூஞ்சி கழுவுனா முகம் அழகா தெரியும்னு ஜெயலலிதான்னு ஒரு சினிமா கவர்ச்சி நடிகை (தக்காலி, கேப் கெடைக்கும்போதெல்லாம் போடுவோம்ல...) 1976 ல ஆனந்த விகடனுக்கு பேட்டி குடுத்தத மறக்காம இருந்து கப்புன்னு யுஸ் பண்ணிகிட்டான் வெளியூர்க்காரன்.ஆனா ,ஒன்னும் பெருசா வித்யாசம் இல்லாம பழைய மாதிரியே எங்கப்பா முகச்சாடைல அசிங்கமாத்தான் தெரிஞ்சுது என் மூஞ்சி..ஒரு இளனி வாங்கி வண்டி கண்ணாடிய கூட கழுவி பார்த்தேன்..ம்ஹும்...உடனே என் அண்ணன் இப்டின்னு இளனிக்கார அண்ணன கேட்டேன்...அதுக்கு அவன் இளனிய காய வெச்சு தேங்கா நார எடுத்து செங்காமட்டைல தொட்டு பரபரன்னு மூஞ்சில தொலுரிய தேய்...அழகாயடுவன்னான் .நாரப்பய...எங்க ஊர்காரன் போலருக்கு..
கரெக்டா மூணு மணி...கண்ணுல “உச்சிமாங்காளி காலிங்.”..காதுல "வந்தால் மகாலக்ஷ்மியே..."..(என் ரிங் டோன்..)..அட்டன் பண்ணேன் ..எங்கட செல்லம் இருக்க ...இது அவுக...உன் இதயத்துல ...இது நான்..ச்சீ பொருக்கி ..இது அவுக...ஆமாம் ..உன் இதய பொருக்கி...இது நான்..டேய் டைம் ஆச்சுடா சொல்லுடா எங்க இருக்க நீ...என் உச்சிமாங்காளி சஸ்பென்ஸ் தாங்க மாட்டாளேன்னு சொல்லிட்டேன்...ஒலிம்பியா டெக் பார்க்கோட ப்ரண்ட் என்ட்ரன்ஸ்ல நிக்கறேன் வாடின்னு..வந்தா...
கந்தசாமில விக்ரம் சேவல் கோழி வேஷம் போட்டுட்டு வர்றத நீங்கல்லாம் பார்த்துருபீங்க..ஆனா ஒரு போந்தாகோழி விக்ரம் வேஷம் போட்டுக்கிட்டு சுடிதார்ல வர்றத நீங்க பார்த்துருகீங்களா..வேணாம்...கற்பனைல கூட நெனைச்சு பார்த்துடாதீங்க...தாங்க மாட்டீங்க...பல அவமானங்களையும் காதல் தோல்விகளையும் டம்மி பீசுகளின் கொடூர பார்வைகளையும் துச்சமென தாங்கி வந்த வெளியூர்காரனாலையே அந்த பீசொட அழக தாங்கிக்க முடியல..குண்டுங்கர வார்த்தையோட அக்காங்க அவ....அவ எனக்கு லிப்ஸ் கிஸ் குடுக்கனும்ங்கர ஆசைல என்னதான் இறுக்கி கட்டி புடிச்சாலும் என் லிப்ஸும் அவ லிப்ஸும் கிட்டக்கவே போகாதுங்க...ஒரு மீட்டர் தூரத்துல அந்தரத்துலையே ஸ்டாப் ஆய்டும்..அவ்ளோ குண்டு..(இதுக்கு மேல விளக்கமா சொன்னா மஜா மல்லிகா மாதிரி செக்சியா எழுதறான் வெளியூர்காரன்னு பதிவு வெளியிட்ருவான் பட்டாப்பட்டி ...)மொத்ததுல வெளியூர்க்கரனுக்கே புடிக்கலைனா அது எவ்ளோ பெரிய டம்மியோட அக்கா பீசுங்கரத நீங்களே புரிஞ்சுக்கங்க..
உலகத்துலேயே ஈசியான விஷயம் ஒரு பிகர உஷார் பண்றது..நல்லா நாலு ஜோக்க நறுக்குன்னு தட்டி விட்டா படக்குன்னு மடில விழுந்துடுவாலுக..ஆனா அதே மாதிரி உலகத்துலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் உஷார் பண்ண ஜிகுடிய கயட்டி விடறது..நீங்கல்லாம் இத படிக்கும்போது தலைய ஆட்டும்போதே தெரியுது..அது எவ்ளோ பெரிய கஷ்டம்னு...
ஆனா வெளியூர்காரனுக்கு ரெண்டுமே அசால்ட்டு பத்திரி ரைடுங்க...சிம்பிளா ஒரு கேள்வி கேட்டேன்..பயந்து போய் மொபைல விட்டுட்டு தலை தெறிக்க ஓடிட்டா. அது என்ன கேள்வின்னு கேக்கறீங்களா... ..
என்ன கல்யாணம் பண்ணிக்கிறியாடி உச்சிமாங்காளின்னு...
வெளியூர்க்காரன்..