காலைல மணக்க மணக்க மல்லிப்பூ இட்லி புதினா சட்னி..ஸ்டாலின் அண்ணன் வீட்லேர்ந்து...மதியத்துக்கு நண்டு கொழம்பும் கத்திரிக்காய் தொக்கும் அழகிரி அண்ணன் வீட்லேர்ந்து...ராத்திரிக்கு கெட்டி தயிர் சாதமும் மாவடும் தயாநிதி அண்ணன் வீட்லேர்ந்து...இப்டி டிசைன் டிசைனா விதவிதமா அறுசுவை உணவுகள் உங்க வீட்டுக்கு வந்து இறங்கும்...ராஜ மரியாதையோட...அதுவும் டெய்லி...பாசத்தோட வரும்...இருங்க மேடம் இதுக்கே வாய போளக்காதீங்க...இன்னும் நெறைய இருக்கு எங்க ஆபர் லெட்டர்ல...
அதுக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லிக்கறேன்...வணக்கம்..நான் உங்க எதிர்க்கட்சிக்காரன்..ஆனா நீங்களும் என் தலைவரும் மெரினா பீச்ல உக்கார்ந்து குழந்தைகளாட்டம் கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடிக்கிட்டே சந்தோசமா சிரிச்சு பேசிக்கனும்னு ஆசைபடற ஒரு எதிர்கட்சிக்காரன்..அந்த நிகழ்வ ஜெயா டிவியும் கலைஞர் டிவியும் ஒரே கேமரால வீடியோ எடுத்து பாதி பாதிய டெலிகாஸ்ட் பண்றத அறிவாலயத்துல உக்காந்து பார்க்கனும்னு ஆசைபடற ஒரு நல்ல மனசுக்காரன்...
அதோட முதல் படிதான் உங்களுக்கு இந்த ஆபர் லெட்டர்.... உங்களோட அரசியல் மறுமலர்ச்சிக்கு ஒரு மிகபெரிய வாய்ப்பாவும் திருப்பமாவும் இந்த லெட்டர் அமையப்போகுதுங்கரத வரலாறு சொல்லும்...
அதிமுகவுக்கு தமிழ்நாட்லயும் ,பிஜேபிக்கு இந்திய அரசியல்லயும் அரசியல் எதிர்காலம் இல்லைங்கறது தெள்ளதெளிவா என் பக்கத்துக்கு வீட்டு பாப்புக்கு கூட தெரிஞ்சு போச்சு மேடம்... இதுக்கப்புறமும் நீங்க ஓ. பண்ணீர்செல்வத்த பொதுபணிதுறை அமைச்சராகிட்லாம்னு பகல் கனவு கண்டீங்கன்னா அது வடிகட்ன சசிகலாதனம்..அதனால சாட்சிக்காரன் கால புடிக்கறத விட சண்டைக்காரன் கால புடிக்கறத உத்தமம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்ல..நீங்க படிச்சவங்க..மொள்ளமாரி எவனா இருந்தாலும் சரின்னு பாரபட்சம் இல்லாம அந்த உத்தமர் சங்கராச்சார்யாரையே புடிச்சு உள்ள தூக்கி போட்டு மிதிச்ச சூரப்புலி நீங்க...நல்லது கேட்டது உங்களுக்கு தெரியாதது இல்ல...
ஒரு திருவாருர்காறன சரிகட்ட இன்னொரு திருவாருர்காரனலதான் மேடம் முடியும்...மன்னார்குடிகாரங்கள லெப்ட்ல விடுங்க...அவங்க கத்துக்குட்டி அரசியல தப்புதப்பா சொல்லி குடுகறாங்கே உங்களுக்கு..அவங்க பேச்சை இனிமேயும் கேட்டீங்கன்னா மசால் வடை கூட சுட்டு வியாபாரம் பண்ண முடியாது தமிழ்நாட்ல...அதனால இன்னும் கொஞ்ச நாள் இந்த வெளியூர்க்காரன் சொல்ற பேச்சை கேளுங்க....
மொதல்ல இந்த வைகோவ கயட்டி விடுங்க.தனிப்பட்ட முறைல நான் நிறைய மரியாதை வெச்சுருக்கற அரசியல்வாதி அவரு...நல்ல பேச்சு தெறமை நல்ல மனிதர்...ஆனா ஒரு கட்சிக்கு தலைவங்கர முறைல அந்த மனுஷனுக்கு நாக்குல சனி...எழவு எத செஞ்சாலும் தரித்திரமா முடியும்..அவரு யாரோட கூட்டணி வெச்சாலும் அவங்க கொடநாட்டுக்கு போக வேண்டியதுதான்...நாங்க அவர எங்க கட்சிய விட்டு அனுப்பறதுக்கு எவ்ளோ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சோம்கறது எங்களுக்குத்தான் தெரியும்...சொந்த தொகுதிலையே தோத்து போன வெக்கம் கெட்ட மனுசன இன்னும் ஏன் கூட்டணில வெச்சுருகீங்க..அத்து விடுங்க அவங்கே உறவை...இன்னிக்கே அன்னோன்ச்ஸ் பண்ணுங்க..சகோதரி கிகோதரின்னு எவனாச்சும் போயேஸ் கார்டன் பக்கம் வந்தா பிஞ்ச செருப்பாலேயே அடிப்பேன்னு அறிக்கைல சொல்லுங்க..நாஞ்சில் சம்பத்த மட்டும் கொஞ்சம் ஐஸ் வெச்சுக்கங்க...மதிமுக அவனுகளும் வளர மாட்டானுக..அடுத்தவனையும் வாழவிட மாட்டானுக..
அடுத்தது இந்த ராமதாசு..வைகோவாச்சும் மனுஷ கூட்டம்...இந்த ஆள் என்ன டைப்புன்னு இவருக்கே தெரியாது...ரெண்டு மினிஸ்டர் போஸ்ட்டும் ரெண்டு டாட்டா சுமோ காரும் குடுத்தா போதும்...இவரு டி.ராஜேந்தரோட லட்சிய திமுகல கூட போய் சந்தோசமா சேருவாறு..இந்த ஆளுக்குன்னு தனியா கொள்கை கோட்பாடு எதுவும் கெடயாது...இவரும் இவரு புள்ளையும் அரசியல் வியாபாரிங்க...தேசிய கட்சியா இருந்து போன எலெக்சன்ல மாநில கட்சியா ப்ரோமோசன் வாங்குன சூரப்புலிங்க..இவங்கேல ஏன் தலைவர் டீல் பண்ற மாதிரி டீல் பண்ணுங்க...அறுத்தும் விடாதீங்க தொடர்பும் வெச்சுகாதீங்க..அரசியல் வார்த்தைல சொல்லனும்னா இப்ப விட்ட மாதிரியே நட்டாத்துல மெய்ண்டைன் பண்ணுங்க இவங்கேல...இப்போ உங்க கட்சியா நீங்க விட்டீங்கள்ள அந்த மாதிரி.கொழம்பி போய் அரசியல் அனாதை ஆய்டுவாங்கே..
கம்யுனிஸ்ட் கட்சிகள பத்தி பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல..அவுட் ஆப் சிலபஸ் ஆன ஒரு சித்தாந்தத்த வெச்சுகிட்டு இன்னும் மக்களுக்கு நல்லது செஞ்சிரலாம்னு திராவிட கட்சிகள எதிர்த்து போராடிகிட்ருக்க பழைய காலத்து நல்லவங்க..பாட்டாளி வர்க்கம்..போராட பொறந்தவங்க....இந்தா மினிஸ்டர் போஸ்ட்...இத வெச்சுக்கிட்டு மக்களுக்கு எதாச்சும் நல்லது பண்ணுன்னு இவங்ககிட்ட கூப்டு குடுத்தீங்கன்னா...அத ஏத்துக்காம ரோட்ல மறுபடியும் போய் நின்னுகிட்டு நீ செஞ்சு குடு நான் மக்களோட நின்னு போராட்றேன்னு சொல்ற தியாகிங்க...ஏன்னா அவங்களுக்கு போராட மட்டும்தான் தெரியும்...ஆட்சி பண்ண தெரியாது...அவங்கள ஒன்னும் பண்ணாதீங்க ..அப்டியே விட்ருங்க...கத்திட்டு போகட்டும்....
டிஎம்டிகே...என் தலைவர் வாழ்க்கைளையே பண்ண ஒரே தப்பு விஜயகாந்தோட கேள்விகளுக்கு முரசொலில பதில் சொன்னது....அதும் அரை பக்கத்துக்கு...எங்கள அறியாம நாங்க வளர்த்து விட்ட கள்ளி செடி இது...இத நாங்க பார்த்துக்கறோம்..இத இப்டியே விட்டா ஒவ்வொரு எலேக்சன்லையும் உள்ள பூந்து வோட்ட பிரிச்சு கொழப்பிகிட்டு இருக்கும்..கூடிய சீக்கிரம் இத முடிச்சிருவோம்...அதனால இத பத்தி நீங்க கவலைபடாதீங்க...ஆப்பு ரெடி பண்ணிகிற்றுக்கோம் கூடிய சீக்கிரம் சொருகிடுவோம்....
காங்கிரஸ் பொறுத்த வரைக்கும் சோனியா காந்தி இந்தியர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை அப்டீன்னு மட்டும் அறிவிங்க...அதுக்கு மேல எந்த பெர்பார்மன்சும் பண்ண முயற்சி பண்ண வேண்டாம்...அதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்...நீங்க நான் சொல்றத மட்டும் செய்ங்க...கடுகளவு கூட எக்ஸ்ட்ரா பெர்பார்மன்ஸ் பண்ணக்கூடாது...
சரத்குமாரோட சமுக, டி.ராஜெந்தரோட லதிமுக அப்பறம் கார்த்திக்கோட கட்சி இதெல்லாம் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல...டாயிலெட் பேப்பர என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும்...
இது எல்லாம் முடிஞ்சோன்ன சசிகலா இனிமே என் சகோதரி இல்லைன்னு மீடியாவ கூப்டு கண்ணீரோட அறிவிச்சுடுங்க..கடைசியா ஒரு புன்னாக்குக்கும் உதவாத உங்க கட்சியா கலைச்சிட்டு அண்ணா அறிவாலயம் வந்து என் தலைவர் முன்னிலைல மிச்சம் இருக்கற உங்க கட்சிகாரங்களோட திமுகல சேருங்க.....
அடுத்த நாளே ஓ பண்ணீர்செல்வத்த ஜே.கே.ரித்திஸ்க்கு துணை மந்திரி ஆக்கறோம்...ஓ எஸ் மணியன ஸ்டாலினோட பயண திட்டங்கள தயார் பண்ற சிறப்பு மேலாளர நியமிக்கறோம்....எஸ் எஸ் சந்திரன மு க அழகிரி அண்ணன் வீட்டுக்கு வாரம் ஒரு தடவை போய் அவரு பேர புள்ளைங்க முன்னாடி நின்னு ஸ்டான்ட் அப் காமெடி பண்ணி சிரிக்க வெக்கற அரசவை விகடகவிங்கற ஒரு புது பதவில உக்கார வெச்சு அழகு பார்க்கறோம்..செம்மலைய துரைமுருகன் போற எடத்துக்கெல்லாம் கூடவே துண்டு எடுத்துட்டு போற துண்டுதாங்கிங்கற பதவிய அளிக்கறோம்..(உங்க காலுல மட்டும் அந்த ஆள் விழலாம்...எங்களுக்கு துண்டு தூக்க கூடாதா....)..சேகர் பாபுவ,பரிதி இளம்வழுதி அண்ணன்கிட்ட ஜுராசிக் பார்க்ல டைனோசருக்கு சாப்பாடா மாட்ட ஏறக்கர மாதிரி அப்டியே துண்டா ஒப்படைக்கறோம்...பரிதி அண்ணனுக்கு என்ன புடிக்குதோ அத அவரு செஞ்சிக்கட்டும்...பயபடாதீங்க வீட்டு வேலையெல்லாம் குடுக்க மாட்டாரு..என்ன டென்சன் ஆனா பொளேர் பொளேர்னு அடிச்சு தான் கோவத்த தீத்துக்குவாறு அவ்ளோதான்...(வெளிநடப்பாடா பண்றீங்க சட்டமன்றத்துல .என் தலைவன் பேசும்போது...எதிர்த்து சவுண்ட் குடுத்த அன்னிக்கே உங்க வாய கிழிச்சு விட்ருக்கனும்டா....)
அது மட்டும் இல்லாம அதிமுகவோட அடிமட்ட தொண்டர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு காத்துகிட்ருக்கு .நீங்க எங்க கழகத்துல இணைஞ்ச அடுத்த நாள் தமிழகம் பூரா இருக்கற அனைத்து ரெத்தத்தின் ரெத்தங்களையும் அந்தந்த பகுதில இருக்கற திமுக அமைப்பு செயலாளர்களோட வீட்டுக்கு போய் ரேசன் கார்ட சரண்டர் பண்ணிட்டு வெத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டு ஆளுக்கொரு வேஷ்டியும் துண்டும் இலவசமா வாங்கிட்டு போக சொல்லுங்க...இதுக்கு மேல என்ன மரியாதை வேணும் உங்க தொண்டர்களுக்கு..
அப்பறம் ஜெயா டிவில இருக்கற எல்லா கேமரா லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் கத்திபாரா பாலத்துக்கு கீழ போட்டு கேரசீன் ஊத்தி கொளுத்திட்டு ரபி பெர்னார்ட் தலைமைல அறிவாலயத்துக்கு டெய்லி விடியகாலைல வந்து வயத்துல ஈர துணிய கட்டிக்கிட்டு பாவமா நிக்க சொல்லுங்க...கூடிய சீக்கிரம் பணி வழங்க ஆவண செய்றோம்...
கடைசியா மிச்சம் இருக்கறது நீங்க மட்டும்தான்...இந்திய அளவுல புகழ் பெற்ற ஒரு தேசிய தலைவர்ங்கரத விட்டு தள்ளுங்க...ஒரு வயசானவர நாகரீகமா எப்டி நடத்தனும்கறது கூட தெரியாம அடிச்சு இழுத்துட்டு போய் ஜெயில்ல அடைச்சு அநாகரீகமா அரசியல் பண்ண ஒரே அரசியல் தலைவர் நீங்க மட்டும்தாங்கறது உலகத்துக்கே தெரியும்...வருசமான மறக்கறதுக்கு இதென்ன கேர்ள் பிரெண்டோட மொபைல் நம்பரா மேடம்..ரணம் .எல்லா திமுககாரன் மனசுலயும் ஆழமா பதிஞ்சிருக்கற ரணம்.ஜூன் 30 அன்னிக்கு எத்தன பேர் வீட்ல டிவி உடைஞ்சதுன்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்.....எங்களுக்கு இத மனசுலையே வெச்சுகிட்டு நேரம் அமையரப்ப பழிவாங்கற பழக்கமெல்லாம் கெடயாது...நாங்க அண்ணாவோட வாரிசுங்க...
ஆனா பாருங்க இப்பன்னு பார்த்து உங்களுக்கு குடுக்கறதுக்கு எந்த பதவியும் காலியா இல்ல மேடம்...ஏன்னா இது பாரம்பரியம் மிக்க பெரிய கட்சி..யாரையும் ஏமாத்தி புடுங்குன கட்சி இல்ல..கலைஞரும் அண்ணாவும் ரெத்தம் சிந்தி வளர்த்த கட்சி.இங்க இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களே எக்கச்சக்கம் பேரு இருக்காங்க...முதலமைச்சர் வேட்பாளர்களே மூணு பேர் இருக்காங்க...அது மட்டும் இல்லாம கட்சில சேர்ந்த உடனே பெரிய பதவி கெடைக்கறதுக்கு இது உங்க கட்சி மாதிரி கெடயாது...கேப்ல போஸ்டிங் வாங்க முடியாது...அதனால சீர்காழி பக்கத்துல ஒரு கிராமத்துல பஞ்சாயத் போர்டு தலைவி பதவி நிரப்பபடாம இருக்கு..அத வேணா நான் வாங்கி தரேன்...நீங்க நிரப்புங்க..அவ்ளோ பெரிய பொறுப்ப உங்களுக்கு குடுக்க கட்சி பொதுக்குழு ஒத்துகாதுதான்..ஆனா நான் எப்டியாச்சும் பேசி உங்க முன் அனுபவத்த எல்லாம் சொல்லி போராடி வாங்கி குடுக்கறேன்...மக்களுக்காக களப்பணி ஆற்றுங்க...என்ன சொல்றீங்க...தலைவர்கிட்ட பேசவா....?
(இந்த லெட்டர எந்த அட்ரசுக்கு அனுப்பறதுன்னு தெரில மேடம்..ஏன்னா நீங்க இப்போ எங்க இருக்கீங்கன்னு உங்க ரெத்தத்தின் ரெத்தங்களுக்கே தெரில. .... அதனால இத நகலெடுத்து கோடநாடுக்கு ஒன்னு..தோட்டத்துக்கு ஒன்னு,ராயபேட்டா ஆபிஸ்க்கு ஒன்னு,ஹைதராபாத்க்கு ஒன்னு,உங்க சொந்த ஊருக்கு ஒன்னுன்னு அனுப்பி வெக்கறேன்..எங்க இருக்கீங்களோ அங்க பிரிச்சு படிச்சு பாருங்க...பட்,சீக்கிரம் பதில சொல்லுங்க..எலெக்சன் வர போகுது எங்களுக்கு நிறைய வேலை கெடக்கு...இன்னும் ரெண்டு மூணு கட்சியா வேற கலைக்கனும்....)
வெளியூர்க்காரன்